ADDED : ஆக 08, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: உலக தாய்ப்பால் வார விழா சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார்.
தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் நலப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மகப்பேறு மருத்துவர் நாகசுதா பேசினர். மருத்துவ மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவ கண்காணிப்பாளர் தங்கதுரை, நிலைய மருத்துவர் முகமது ரபி, குழந்தைகள் நல இணை பேராசிரியர் வனிதா, மகப்பேறு நல இணை பேராசிரியர் தென்னரசி உள்ளிட்ட டாக்டர்கள் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.