
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாநில யோகா போட்டி சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பாக நடந்தது. இதில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிக்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி.,சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.
6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். 60 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாஸ்டர் பரமசிவம் பரிசுகளை வழங்கினார்.