ADDED : நவ 27, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கொல்லங்குடி அரசு பள்ளி அருகே மதுவிலக்கு எஸ்.ஐ.,ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சையது காட்டுவா 34 என்பவர் நின்றார்.அவரை சோதனை செய்தனர். அவரிடம் விற்பனை செய்வதற்காக 500 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.