ADDED : பிப் 17, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சுப்ரமணியபுரம் 7வது வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சபரி 19. இவர் புதிய பைக்கில் வலையன் வயலைச் சேர்ந்த சுரேஷ் மகன் குமார் 18 என்பவருடன் மாத்தூரில் இருந்து இலுப்பக்குடி வந்து கொண்டிருந்தார்.
வளைவில் பைக்கை திருப்ப முயன்ற போது தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த சபரி உயிர் இழந்தார்.
குமார் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.