ADDED : மார் 17, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். மகள் சுபாவேணி 21,க்கும் அய்யனார் குளத்தை சேர்ந்த கருப்பசாமிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடால் சுபாவேணி குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். சுபாவேணி அடிக்கடி அலைபேசியில் பேசியபடி இருந்தார். நேற்று முன்தினம் மாலை சுபா வேணி போனில் பேசியதால் ஆத்திரமுற்ற 16 வயது தம்பி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். ஆலங்குளம் போலீசார் நேற்று சிறுவனை கைது செய்தனர்.

