ADDED : நவ 22, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு பகுதி பேட்டையைச் சேர்ந்த திவான் மைதீன் மகன் முஸம்மில் 22.
இவர் நேற்று மதியம் அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் முஸம்மிலை கத்தியால் குத்தினார். காயமுற்றவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து கடைய நல்லூர் போலீசார் விசாரித்தனர். அவரது நண்பரான அப்பகுதியைச் சேர்ந்த அபூபக்கரை 22, கைது செய்தனர்.

