sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் * தி.மு.க.,வினரே வாக்களித்தனர்

/

சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் * தி.மு.க.,வினரே வாக்களித்தனர்

சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் * தி.மு.க.,வினரே வாக்களித்தனர்

சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் * தி.மு.க.,வினரே வாக்களித்தனர்


ADDED : ஜூலை 18, 2025 02:32 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் அவர் தோல்வியுற்றார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக தி.மு.க.,வைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். இவர் முறையாக பணியாற்றவில்லை, கவுன்சிலர்களை அனுசரித்து செல்லவில்லை எனக்கூறி அவருக்கு எதிராக கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். குரல் ஓட்டில் அவருக்கு எதிராக பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஓட்டளித்ததால் அவர் தோல்வியுற்றார். குரல் ஓட்டெடுப்பை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது.

நகராட்சி கமிஷனர் நாகராஜ் ஓட்டெடுப்பை நடத்தினார். காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக இருந்தது.

11:30 மணி வரை இரண்டு கவுன்சிலர்களுக்காக வேண்டுமென்றே காத்திருக்கிறீர்கள் எனக் கூறி கூட்டத்திற்கு வந்த தலைவி உமா மகேஸ்வ|ரி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குடிநீர் பாட்டிலை துாக்கி வீசினார்.

ரகசிய ஓட்டெடுப்பில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டு போட்டு அவரை பதவி இழக்க செய்தனர்.

இதில் தி.மு.க.,7, அ.தி.மு.க.,12, ம.தி.மு.க., 2, காங்., 1, சுயேச்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 என மொத்தம் 28 கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால் உமா மகேஸ்வரி பதவி இழந்தார்.

முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு புதிய நகராட்சி தலைவி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us