sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்

/

விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்

விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்

விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்


ADDED : பிப் 22, 2025 12:59 AM

Google News

ADDED : பிப் 22, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்

தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லுாரியில், 230 மாணவ - மாணவியர் பல்வேறு இசைப்பிரிவுகளில் படிக்கின்றனர். இங்கு விடுதி வசதி கிடையாது. தனியார் மண்டபம், விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

விடுதியில் வழங்கப்படும் உணவில், பீடித்துண்டு, கரப்பான் பூச்சி, புழுக்கள் இருந்துள்ளன. இதனால், நேற்று காலை, திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி - கும்பகோணம் சாலையில் திரண்ட மாணவர்கள், புதிய விடுதி கட்டித்தரவும், தரமான உணவு வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரவும் வலியுறுத்தி மறியல் செய்தனர்.

திருவையாறு டி.எஸ்.பி., அருள்மொழி அரசு, கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஸ்ரீ வித்யா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us