sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பலுானை விழுங்கிய 7 மாத குழந்தை பலி

/

பலுானை விழுங்கிய 7 மாத குழந்தை பலி

பலுானை விழுங்கிய 7 மாத குழந்தை பலி

பலுானை விழுங்கிய 7 மாத குழந்தை பலி


ADDED : மார் 05, 2025 12:28 AM

Google News

ADDED : மார் 05, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்; பலுானை விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஏழு மாத ஆண் குழந்தை இறந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. இவரது மனைவி சிவகாமி, 30. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை பிரகதீசன். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென மயங்கி, வெகுநேரமாகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. குழந்தையின் தாய், குழந்தைக்கு பால் கொடுக்க முயன்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில், குழந்தையின் தொண்டை பகுதியில் பலுான் சிக்கி இருந்தது தெரியவந்தது.

குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us