/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்
/
தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்
ADDED : ஆக 22, 2024 07:28 PM

தஞ்சாவூர்:மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தஞ்சாவூரில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தின் சார்பில், உலக நாட்டுப்புற கலை தின விழா- 2024 நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சுமார் 800க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு, முனிசிபல் காலனியில் இருந்து தென்னக பண்பாட்டு மையம் வரை, நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைத்தும், கலைஞர்கள் நடனமாடியபடியும் ஊர்வலமாக சென்றனர்.
பிறகு, ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடந்தது. தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆணையின்படி தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி கலந்துக்கொண்டார்.

