sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

/

வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

1


ADDED : பிப் 28, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:22 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:கும்பகோணத்தில், வி.சி., கொடி கம்பத்தை, பா.ம.க.,வினர் உடைத்து விட்டதாக, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பிப்., 23ம் தேதி வன்னியர் சங்கம் சார்பில், சமய நல்லிணக்க மாநாடு நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, வளையப்பேட்டையில் வி.சி., கட்சி கொடி கம்பத்தை சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சமூக வலைதளங்களில் வி.சி., கொடி கம்பம் சேதப்படுத்தியது குறித்து, இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியானது.

கும்பகோணம் தனிப்படை போலீசார் விசாரித்து, வீடியோ பதிவிட்ட திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்தி, 21, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், வன்முறையை துாண்டி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் கருத்துகளை வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பா.ம.க., தொண்டர்களால் வி.சி., கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் எந்த கட்சிக்கு எதிராகவும், இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என, பா.ம.க., தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us