sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

கோவில் உண்டியலில் காந்தம் நுாதனமாக திருடியவர் கைது

/

கோவில் உண்டியலில் காந்தம் நுாதனமாக திருடியவர் கைது

கோவில் உண்டியலில் காந்தம் நுாதனமாக திருடியவர் கைது

கோவில் உண்டியலில் காந்தம் நுாதனமாக திருடியவர் கைது


ADDED : மார் 01, 2025 02:49 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்னைநல்லுார்: தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பின், பிப்., 10ல் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பல உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஒரு உண்டியல் முன், இளைஞர் ஒருவர் வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதை, 'சிசிடிவி' கேமராவில் கோவில் ஊழியர்கள் பார்த்துள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க ஊழியர்கள் சென்றபோது, அந்த இளைஞர் தப்பியோடினார். கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காந்தத்தை நுாலில் கட்டி, உண்டியலில் இருந்து நாணயங்களை திருடியது தெரிய வந்தது. கங்காதரபுரம் அய்யப்பன், 24, என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us