/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெண்ணுக்கு தொல்லை; ஓய்வு பெற்ற எச்.எம்., கைது
/
பெண்ணுக்கு தொல்லை; ஓய்வு பெற்ற எச்.எம்., கைது
ADDED : மார் 10, 2025 11:28 PM

தஞ்சாவூர்; தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 70; ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். வட்டிக்கு பணம் கொடுத்து வரும் இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண், போனில் 15,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
ஆரோக்கியசாமி பணம் தருவதாகவும், அதை திருப்பித் தர வேண்டாம் என்றும், அதற்கு மாறாக தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அந்த பெண் போன் இணைப்பை துண்டித்தும், ஆரோக்கியசாமி விடாமல் போன் செய்து, பெண் வீட்டிற்கும் சென்றுள்ளார்.
தனியாக இருந்த பெண்ணை கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இச்சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், இது குறித்து போலீசிலும் புகார் அளித்தார். அனைத்து மகளிர் போலீசார், ஆரோக்கியசாமியை நேற்று கைது செய்தனர்.