sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மாமியாருடன் 'பழகிய' நபரை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மருமகன் கைது

/

மாமியாருடன் 'பழகிய' நபரை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மருமகன் கைது

மாமியாருடன் 'பழகிய' நபரை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மருமகன் கைது

மாமியாருடன் 'பழகிய' நபரை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மருமகன் கைது

1


ADDED : ஜூலை 29, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே பத்துக்காடுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன குழந்தை, 49; வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். இவருக்கு மனைவி குழந்தை உள்ளனர்.

கடந்த 23ம் தேதி முதல் தன் கணவரை காணவில்லை என, திருவோணம் போலீசில் கடந்த 25ம் தேதி ஜோதி புகார் அளித்தார். அதுபோல, சின்ன குழந்தையை காணவில்லை என, பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த பாத்திமா, 57, பட்டுக்கோட்டை டவுன் போலீசில், புகார் அளித்தார்.

பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தில் பாத்திமா மருமகன் விஜயகுமார், 40, என்பவரிடம் விசாரித்தனர்.

சின்ன குழந்தைக்கும், பாத்திமாவுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. பாத்திமாவுக்கும், அவரது மகள் பைரோசுக்கும் சின்ன குழந்தை பண உதவி செய்து வந்தார்.

பைரோசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் திருமணமான நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். சின்ன குழந்தை பண உதவிகளை செய்வதால் தான், தன் மனைவியும், மாமியாரும் தன்னை மதிப்பது இல்லை என, விஜயகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி பாத்திமாவை தேடி, சின்ன குழந்தை வந்த போது, வீட்டில் விஜயகுமார் மட்டுமே இருந்தார். அப்போது, விஜயகுமாருக்கும், சின்ன குழந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விஜயகுமார், சின்ன குழந்தையை கட்டையால் அடித்ததில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

அவரது உடலை, வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்கில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல விஜயகுமார் இருந்தார். போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us