sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

/

ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 


ADDED : ஆக 15, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர், 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர் பரத்வாஜ், ஜெயந்தி சுந்தர் ஆகியோரிடம், அடுக்கு மாடி குடியிருப்பில் தனி பிளாட் கேட்டு, முன்தொகையாக, 5 லட்சம் ரூபாயை கடந்த, 2022ல் செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே சிவபுரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில், வீடு ஒதுக்கீடு செய்துள்ளதாக கிருஷ்ணனுக்கு தகவல் அனுப்பினர். அதனால், 25.18 லட்சம் ரூபாயை, 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' நிறுவனத்திற்கு, பல தவணைகளாக செலுத்தினார்.

எனினும், கிருஷ்ணனுக்கு என ஒதுக்கப்பட்டதாகக் கூறிய வீட்டை வழங்காமல் இழுத்தடித்தனர். இதனால், கடந்த மே 6ல், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் வேலுமணி, 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள், 25.18 லட்சம் -ரூபாயை, கிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதற்கு, 9 சதவீத வட்டி வழங்க வேண்டும். மேலும், சேவைக் குறைபாடு, தவறான வணிக நடவடிக்கைகளுக்காக, 5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாயை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்' எனவும் நேற்று உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us