sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

விதிகளை பின்பற்றாமல் சாலை மீதே சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் முன் மரங்களும் காலி

/

விதிகளை பின்பற்றாமல் சாலை மீதே சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் முன் மரங்களும் காலி

விதிகளை பின்பற்றாமல் சாலை மீதே சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் முன் மரங்களும் காலி

விதிகளை பின்பற்றாமல் சாலை மீதே சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் முன் மரங்களும் காலி


ADDED : ஜூன் 20, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில், 2020ம் ஆண்டு, 40 கி.மீ.,க்கு, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை, 2025ம் ஆண்டுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியில், பழைய சாலையை பெயர்த்து அகற்றாமல், அதன் மேலேயே அரை அடி உயரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலையின் இரண்டு புறங்களில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களின் வாசலுக்கு மேல், சாலை உயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

'தமிழகத்தில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன், பழைய சாலையை முழுமையாக பெயர்த்து அகற்றி எடுக்க வேண்டும். அதன்பின், அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும். இதை மீறிச் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 2021ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால், கும்பகோணம் பகுதிகளில் அமைக்கப்படும் சாலை பணியில், பழைய தார் சாலைகளைப் பெயர்த்து அகற்றாமல் புதிய சாலைகளை அமைத்து வருகின்றனர்.

இதனால் சாலை மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால், மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் சென்று விடுகிறது.

இவ்வாறு கூறினர்.

கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் அலுவலகம் முன் மரங்கள் உள்ளன. ஆனால் மரத்தின் வேருக்கு தண்ணீர் செல்லமுடியாத அளவுக்கு அறிவாளித்தனமாக, மரத்தை சுற்றி தார் ஊற்றி சாலை அமைத்துள்ளனர். இதைப் பார்த்து செல்லும் மக்கள் பலரும், 'மரங்கள் இன்னும் சில நாட்களில் பட்டு விடும். இப்படித்தான் இவர்கள் வேலை எல்லாம்' என, வேதனையுடன் கடந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us