sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது

/

ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது

ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது

ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது


ADDED : ஜூலை 24, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், 41, விடுதலை சிறுத்தை கட்சியின், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி ரூபின்ஷா, கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர்.

அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில், அவரது வீட்டின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த, கெயில் ஆண்டனி, 22, அர்னால்டு ஆண்டனி, 23, அருண்குமார், 21, பால்சாமி, 23, ஆகிய ரவுடிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள். 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அலெக்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து, கும்பகோணம் உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த அவரை, போலீசார், நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அலெக்ஸ் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு உள்ளது. நான்கு ரவுடிகளை கைது செய்த போது, அலெக்ஸ் வீட்டில் இருந்தார். இருப்பினும், அவரை பிடிக்க முயன்ற போது தப்பித்து விட்டார். வெளியூர்களில் இருந்த அலெக்ஸ் நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தார். தகவலறிந்து, பதுங்கி இருந்தவரை மடக்கி பிடித்தோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us