sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

முறைகேடாக பயன்படுத்திய சிலிண்டர்கள் அதிரடி பறிமுதல்

/

முறைகேடாக பயன்படுத்திய சிலிண்டர்கள் அதிரடி பறிமுதல்

முறைகேடாக பயன்படுத்திய சிலிண்டர்கள் அதிரடி பறிமுதல்

முறைகேடாக பயன்படுத்திய சிலிண்டர்கள் அதிரடி பறிமுதல்


ADDED : ஆக 26, 2011 01:29 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: சுவாமிமலையில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் முறைகேடாக பயன்படுத்திய 11 சிலிண்டர்களை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் 15 க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் சிலவற்றில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை சிலர் அனுமதியின்றி வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர் முருகதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம், ரவிச்சந்திரன், உத்திராபதி, உதவியாளர் வெங்கடராஜஞுலு ஆகியோர் கொண்ட குழுவினர் சுவாமிமலை திருமஞ்சனவீதியில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரண்டு மண்டபங்களிலும் 11 சிலிண்டர்கள் அனுமதியின்றி முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வழங்கல் துறையினர் 11 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us