/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சரஸ்வதி மஹால் நுாலகத்தில் கவர்னர் பார்வை
/
சரஸ்வதி மஹால் நுாலகத்தில் கவர்னர் பார்வை
ADDED : நவ 13, 2024 10:58 PM

தஞ்சாவூர்; தமிழக கவர்னர் ரவி நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்தார்.
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், 11:30 மணிக்கு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் வசிக்கும் மராட்டிய அரச குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாடு செய்தார்.
அங்கு, கவர்னர் ரவியை, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
பின், சரஸ்வதி மஹால் நுாலகத்துக்கு கவர்னர் வந்தார். சரஸ்வதி மஹால் நுாலக ஒலி, ஒளி காட்சியகத்தில் தஞ்சாவூரின் வரலாறு, சுற்றுலா தலங்கள் அடங்கிய குறும்படத்தை 25 நிமிடங்கள் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நுால்கள், ஓவியங்கள், பழமையான பொருட்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாலையில் பெரியகோவிலுக்குச் சென்ற கவர்னர் ரவி, கோவிலில் வராஹி, பெருவுடையார், பெரியநாயகி, சன்னிதிகளில் வழிபட்டார். மேலும், நாளை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானை வணங்கினார்.
பின், திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.