sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்

/

ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்

ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்

ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்


ADDED : ஜூன் 01, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தன்னை ஜாமினில் எடுக்க தாமதம் செய்த மனைவிக்கு, பூச்சிக்கொல்லி மாத்திரையை கொடுத்து, கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 50. இவரது மனைவி சரஸ்வதி, 47. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசிக்கிறார்.

பால்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி சிறை சென்ற நிலையில், தன்னை ஜாமினில் எடுக்க, சரஸ்வதியிடம் கூறியுள்ளார். இதில், காலதாமதம் ஏற்பட்டது.

ஜாமினில் வந்த அவர், சரஸ்வதியிடம் தாமதத்துக்காக தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் பால்ராஜ், பூச்சிக்கொல்லி மாத்திரையை வாங்கி வந்து, வீட்டில் இருந்த சரஸ்வதி வாயில், வலுக்கட்டாயமாக அந்த மாத்திரையை போட்டு, தண்ணீரை ஊற்றி விழுங்க வைத்துள்ளார்.

சரஸ்வதியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். சரஸ்வதி நடந்ததை கூறி அழுதுள்ளார். உடன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி இறந்தார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசில், பாகம்பிரியாள் அளித்த புகாரில் பால்ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us