/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
குடந்தை சங்கர மடத்தின் தீர்த்தம் புதுப்பிப்பு
/
குடந்தை சங்கர மடத்தின் தீர்த்தம் புதுப்பிப்பு
ADDED : பிப் 16, 2024 01:42 AM
கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடம், 300 ஆண்டுகள் பழமையானது. மகா பெரியவர் என்றழைக்கப்படும் 68வது பீடாதிபதியான, ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பட்டாபிஷேகம் கடந்த 1907ம் ஆண்டு இந்த மடத்தில் நடந்தது. அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக, காலையில் நீராடி, அனுஷ்டானங்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்திய சிறிய குளத்திற்கு 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சரண தீர்த்தம் என்று பெயரிட்டார்.
பல ஆண்டுகளாக தீர்த்தக்குளமானது போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதையடுத்து சிட்டி யூனியன் வங்கியின் சமூக பங்களிப்பு திட்ட நிதியின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.
இந்த தீர்த்தக் குளம் பக்தர்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி, முன்னாள் தலைவர் மோகன், டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் கோபாலசுவாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.