sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்

/

நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்

நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்

நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்


ADDED : மே 22, 2025 02:12 AM

Google News

ADDED : மே 22, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி:தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகளை தயாரிக்க, வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கி வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி தென்பாதி கிராமத்தில், கடந்த, மே, 18ம் தேதி, நாட்டு வெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், முகமது ரியாஸ், சுந்தரராஜன் இறந்தனர். இதையடுத்து, அனைத்து தாசில்தார்களும் மாவட்டம் முழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி வடபாதியைச் சேர்ந்த சந்திரா என்பவருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில், நாட்டு வெடி மூலப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலில், தாசில்தார் சுந்தரமூர்த்தி சோதனை செய்தார்.

அப்போது, பிளாஸ்டிக் பேரலில், நாட்டு வெடி தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து, நெய்வேலியை சேர்ந்த முனியய்யா, 62, என்பவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us