/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பொங்கல் விழாவில் கயிறு அறுந்து விழுந்த மேயர், துணை மேயர்
/
பொங்கல் விழாவில் கயிறு அறுந்து விழுந்த மேயர், துணை மேயர்
பொங்கல் விழாவில் கயிறு அறுந்து விழுந்த மேயர், துணை மேயர்
பொங்கல் விழாவில் கயிறு அறுந்து விழுந்த மேயர், துணை மேயர்
ADDED : ஜன 13, 2024 01:05 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்ளிட்டோர் தலைமை வகித்து, பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில், கோலப்போட்டி, சாக்கு போட்டி, பலுான் ஊதி உடைத்தல், லெமன் ஸ்பூன், பாட்டுபோட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உரி அடித்தல் போட்டிகள் நடந்தன. இதில், மாநகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கயிறு இழுக்கும் போட்டியில் மேயர் ராமநாதன் தலைமையில், ஆண் பணியாளர்கள் ஒரு அணியாகவும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பெண் பணியாளர்கள் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.
கயிற்றை இழுத்த சிறிது நேரத்தில் கயிறு அறுந்து, மேயர், துணை மேயர், கமிஷனர் என அனைவரும் கீழே விழுந்ததால், அங்கிருந்தவர் பதறினர்.
ஆனால், கீழே விழுந்த நிலையில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்தப்படி எழுந்து விட்டதால், வேறு பிரச்னை எழவில்லை.
இந்நிலையில், மாநகராட்சியில் பொருட்கள் தரமில்லாமல் வாங்கி பணிகளை செய்வது போல, கயிறையும் தரமில்லாமல் வாங்கி வந்ததால் அறுந்து விட்டது என, அங்கிருந்தவர்கள் கிசுகிசுத்தனர்.