sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

 மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு

/

 மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு

 மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு

 மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு


ADDED : டிச 08, 2025 04:44 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: சக மாணவர்கள் தாக்கி பிளஸ் 2 மாணவர் இறந்த விவகாரத்தில் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், டிச., 3ம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

பிளஸ் 1 மாணவர்கள், 15க்கும் மேற்பட்டோர், டிச., 4ம் தேதி பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதி வழியாக வந்த, அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கவியரசன், 17, என்பவரைக் கட்டையால் தாக்கினர்.

போலீசார் 15 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து டிச., 5ம் தேதி தஞ்சாவூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இதற்கிடையில், நேற்று நள்ளிரவு 2:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி கவியரசன் இறந்தார். தொடர்ந்து, கவியரசனை தாக்கிய மாணவர்கள் மீது பட்டீஸ்வரம் போலீசார் அடிதடி, கொலை உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

கவியரசனின் தாய் ராஜலட்சுமி கூறுகையில், “கவியரசனை 25 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றனர். அரசுப் பள்ளி மாணவன் என்ற முறையில், அமைச்சரோ, கலெக்டரோ வந்து பார்க்கவில்லை. பட்டீஸ்வரம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடக்கிறது.

“கஞ்சாவைப் பயன்படுத்தித்தான் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். போலீசார் 15 பேரைத்தான் கைது செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய வேண்டும்,” என்றார்.






      Dinamalar
      Follow us