/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
காசநோய் மருத்துவமனைக்குரிய இடத்தில் சிப்காட் அமைக்க தடை
/
காசநோய் மருத்துவமனைக்குரிய இடத்தில் சிப்காட் அமைக்க தடை
காசநோய் மருத்துவமனைக்குரிய இடத்தில் சிப்காட் அமைக்க தடை
காசநோய் மருத்துவமனைக்குரிய இடத்தில் சிப்காட் அமைக்க தடை
ADDED : அக் 26, 2024 07:09 AM
மதுரை: 'தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அரசு காசநோய் மருத்துவமனைக்குரிய இடத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று இடைக்கால தடை விதித்தது.
செங்கிபட்டி தேவதாஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருவையாறு அருகே செங்கிப்பட்டியில் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை, 1951ல் தமிழக அரசால் துவக்கப்பட்டது. இதற்கு, 488 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
காசநோய் காற்றின் மூலம் பரவும் என்பதால் நகருக்கு வெளியே, மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில், இடைவெளி விட்டு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டன.
இதை, முறையாக பராமரிக்கவில்லை; புதர் மண்டியுள்ளது. குறைந்த டாக்டர்கள், பணியாளர்களே உள்ளனர்.
அந்த பகுதியில், பாரத் பெட்ரோலிய காஸ் சேமிப்பு கிடங்கு, சிட்கோ, அரசு பொறியியல் கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்தியது போக, 220 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதனால் மருத்துவமனையின் கட்டடங்கள், மரங்கள் அகற்றப்படும். காச நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
சிப்காட் அமைப்பதற்காக 220 ஏக்கர் நிலத்தை மாற்ற தடை விதிக்க வேண்டும். அந்த இடத்தை மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மருத்துவமனைக்குரிய நிலத்தை வேறு எந்த நோக்கத்திற்காகவும் மாற்றக்கூடாது என இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர், சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.