sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

சர்வேயரை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

/

சர்வேயரை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

சர்வேயரை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

சர்வேயரை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்


ADDED : மார் 04, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 04, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பெரியக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பவ்யா, 24, சர்வேயர்.

மார்ச் 2ல், சோழகன்குடிக்காடைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் தங்கை ஜோதியின் இடத்தை அளவீடு செய்ய சென்றார். அப்போது முருகானந்தம், அவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி, அவரது கணவர் சுபாஷ் ஆகியோர், அளவீடு பணியை வீடியோ எடுத்தனர்.

அதை தடுத்த பவ்யாவை, முருகானந்தம் தகாத வார்த்தைகளால் பேசி, 'கொலை செய்து விடுவேன்' என மிரட்டி, தாக்கினார். இதை தடுக்க சென்ற வி.ஏ.ஓ., மாரியம்மாளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. சர்வேயர் பவ்யா, போலீசில் புகார் அளித்தார்.

எனினும், மதுக்கூர் போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சர்வேயர் பவ்யா மீது தாக்குதல் நடத்திய முருகானந்தத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரி, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடந்தது.

மாநில நில அளவை அலுவலர்கள் மாவட்ட செயலர் பாரதிராஜா, மாவட்ட தலைவர் தானியல் மார்ஸ் தலைமையில், ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேயர்கள், வருவாய்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், நேற்று சர்வே பணிகள் பாதிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us