sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

100 ஆண்டுகளுக்கு பின் நடந்த சப்தஸ்தான பல்லக்கு திருவிழா 

/

100 ஆண்டுகளுக்கு பின் நடந்த சப்தஸ்தான பல்லக்கு திருவிழா 

100 ஆண்டுகளுக்கு பின் நடந்த சப்தஸ்தான பல்லக்கு திருவிழா 

100 ஆண்டுகளுக்கு பின் நடந்த சப்தஸ்தான பல்லக்கு திருவிழா 


ADDED : மே 09, 2025 02:34 AM

Google News

ADDED : மே 09, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானுார் சவுந்தரயநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி உட்பட ஏழு சிவன் கோவில்களை உள்ளடக்கி சப்தஸ்தான திருவிழா நடந்ததாக வரலாறு உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், இந்த திருவிழா நின்று போனது. இதையடுத்து, ஏழூர் மக்கள் ஒன்று கூடி, மீண்டும் சப்தஸ்தான விழாவை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை, திருக்கானுார் கோவிலில் இருந்து, பல்லக்கில் சாமி அலங்கரிக்கப்பட்டு, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி வரை சென்றது.

பின், திருச்செந்தலை சிவன் கோவிலில் நடைபெற்ற மீனாட்சி கல்யாண வைபவத்தில், கரும்பேஸ்வரர் கலந்து கொண்டார்.

ஏழூர்களிலும் பல்லக்கில் வலம் வந்த சவுந்தரயநாயகி சமேத கரும்பேஸ்வரர், மீண்டும் திருக்கானுாரை அடைந்து, பொம்மை பூ போடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.






      Dinamalar
      Follow us