sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

/

எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது


ADDED : ஜன 11, 2024 01:47 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த பெருமாள், 50, ரோஜா, 45, தம்பதியின் மகள் ஐஸ்வர்யா, 19.

அருகில் உள்ள கிராமமான பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன், 19, என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவரும், டிச., 31ல் திருப்பூர் அருகே திருமணம் செய்தனர்.

பல்லடம் அருகே வாடகை வீட்டில் அவர்கள் வசித்த போது, மகளை காணவில்லை என, பல்லடம் போலீசில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா புகார் அளித்தனர்.

கடந்த 2ம் தேதி, பல்லடம் போலீசார், ஐஸ்வர்யா - நவீன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து, ஐஸ்வர்யாவை மட்டும் பெற்றோருடன் அனுப்பினர்.

மறுநாள், ஐஸ்வர்யா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவசர அவசரமாக அவரது உடலை எரித்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ஐஸ்வர்யாவின் பெற்றோர், அவரை துன்புறுத்தும் வீடியோ வெளியானது.

இதையடுத்து, கடந்த 7ம் தேதி, வாட்டாத்திக்கோட்டை போலீசில், ஐஸ்வர்யாவை அடித்து, துன்புறுத்தி கொலை செய்து, எரித்து விட்டதாக நவீன் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொன்றது உறுதியானது. விசாரணைக்கு பின் நேற்று, பெருமாள், ரோஜா ஆகியோரை கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா இருவரையும், 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பெருமாள் மற்றும் உறவினர்கள் சிலர், ஐஸ்வர்யாவை அடித்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதாக கூறப்படுகிறது. பின், அந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல, பிறரை நம்ப வைத்து எரித்ததும் தெரிய வந்துள்ளது.

பல்லடம் இன்ஸ்., 'சஸ்பெண்ட்'


இந்த வழக்கை சரிவர கையாளவில்லை என்ற புகாரின்படி, பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் கூறுகையில், ''பிரச்னைக்குரிய புகார் என்று தெரிந்தும், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்ததால், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.








      Dinamalar
      Follow us