ADDED : பிப் 14, 2024 01:10 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒதியடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்,48, கூலி தொழிலாளி. இவருக்கு ஐயப்பன், மதியழகன், 25, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணேசன் தினமும் குடித்து வந்து, வீட்டில் ரகளை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணசேன் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் மதியழகன் தனது தந்தை கணேசனை திட்டினார்.
அப்போது, கணேசன் போதையில், மகனை அடிக்க முயன்றார். இதில் ஒருவருக்குகொருவர் தகராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மதியகழன், தன் தந்தை கணேசனின் தலையில் அடித்தார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், மதியகழனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

