sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ராஜராஜசோழன் சதய விழா ஒருங்கிணைப்பு கூட்டம்

/

ராஜராஜசோழன் சதய விழா ஒருங்கிணைப்பு கூட்டம்

ராஜராஜசோழன் சதய விழா ஒருங்கிணைப்பு கூட்டம்

ராஜராஜசோழன் சதய விழா ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : அக் 09, 2011 12:05 AM

Google News

ADDED : அக் 09, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1026 ம் ஆண்டு சதய விழா முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் தஞ்சையில் நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் தலை மை வகித்து பேசியதாவது:மாமன்னன் ராஜராஜ சோழனின் 1026ம் ஆண்டு சதய விழா நவம்பர் நான்கு மற்றும் ஐந்து தேதிகளில் நடக்கிறது.

சதய விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சதய விழா நடக்கும் நவம்பர் ஐந்தாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். சதய விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ராஜராஜ சோழனின் சிறப்பு குறித்த பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.சதய விழா சிறப்பாக அமையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கலைச்செல்வன், நகராட்சி ஆணையர் ஜானகி மற்றும்பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us