/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு; முன்னாள் கமிஷனர் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு; முன்னாள் கமிஷனர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு; முன்னாள் கமிஷனர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு; முன்னாள் கமிஷனர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 26, 2025 12:48 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, அங்கு பணியாற்றிய முன்னாள் மாநகராட்சி கமிஷனர் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்க, 2018ல் 'பயோமைனிங்' முறையில், 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு, குப்பையை தரம் பிரிக்க ஒப் பந்தம் வழங்கப்பட்ட து.
ஒப்பந்தம் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், 40,115 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. பின், புதிய நிறுவனத்துக்கு, 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும், 5,000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, 10.60 கோடி ரூபாய் பில் தொகையை வாங்கியுள்ளார்.
அதற்கு, 8, 328 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தியுள்ளனர்.
இதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் கிளையில், தஞ்சாவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு நடந்து வந்த நிலையில், நவ., 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான ஆவணங்களை எடுத்து சென்றனர்.
விசாரணை மேலும், இது தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வந்த போது, வழக்குப் பதிவு தாமதம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனரும், தற்போதைய துாத்துக்குடி உதவி கமிஷனருமான சர வணகுமார், 48, ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், 62, பணியிட மாறு தல் செய்யப்பட்டுள் ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், 49, ஒப்பந்ததாரர் மணிசே கரன், 37, ஆகிய நான்கு பேர் மீதும், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

