/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
"தீ' விபத்தில் பாதித்தவருக்கு நிவாரணம்
/
"தீ' விபத்தில் பாதித்தவருக்கு நிவாரணம்
ADDED : செப் 01, 2011 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாபநாசம்: பாபநாசம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உம்பளாபாடி பஞ்சாயத்து இளங்கார்குடி கிராமத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சநாதன், சுந்தரமூர்த்தி ஆகியோர்களது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தனது சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.