/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தியாகராஜர் ஆராதனை திருவையாறில் இசையஞ்சலி
/
தியாகராஜர் ஆராதனை திருவையாறில் இசையஞ்சலி
ADDED : ஜன 19, 2025 01:27 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில், தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா ஜன., 14ல் துவங்கியது. நாள்தோறும் காலை, 9:00 முதல் இரவு, 11:00 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிழ்வான நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி வாழ்ந்த வீட்டில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டு, மேள தாளங்கள் முழங்க, வீதியுலாவாக அவரது சன்னிதிக்கு வந்தனர்.
நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.
பிரபல இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலுார் ஜனனி, ஓ.எஸ்.அருண், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர், நாட்டை, கவுள, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் என பஞ்ச ராகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இரவு, 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.