sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை

/

லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை

லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை

லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை


ADDED : நவ 12, 2024 12:49 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், ராஜராஜன் நகரை சேர்ந்த கார்த்திகேயன். இவர் 2011ம் ஆண்டு, கூட்டு பட்டாவை, தனிப்பட்டாவாக மாற்றி தரக்கோரி, அப்போதைய புளியந்தோப்பு வி.ஏ.ஓ., சுந்தரம், 56, என்பவரிடம் கேட்டார். அதற்கு, வி.ஏ.ஓ., சுந்தரம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அறிவுரைப்படி, வி.ஏ.ஓ., சுந்தரத்திடம் கார்த்திகேயன் லஞ்ச பணத்தை கொடுத்த போது, கையும் களவுமாக சிக்கினார்.

இந்நிலையில், நேற்று கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா, குற்றம்சாட்டப்பட்ட சுந்தரத்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இப்போது, 69 வயதாகும் முன்னாள் வி.ஏ.ஓ., சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us