/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிறுமி உடலை தோண்டி எடுத்தது மந்திரவாதியா?
/
சிறுமி உடலை தோண்டி எடுத்தது மந்திரவாதியா?
ADDED : டிச 05, 2025 05:46 AM

தஞ்சாவூர்: புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டியெடுத்த நபர் மந்திரவாதியா என போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அரசடியை சேர்ந்தவர் தங்கராசு. லாரி டிரைவர். இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். இதில், இரண்டாவது மகள் தர்ஷிகா, 12; ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
தர்ஷிகாவுக்கு மஞ்சள்காமாலை நோயால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை, அரசடி மண்ணியாற்று கரை மயானத்தில் அடக்கம் செய்தனர்.
நேற்று தர்ஷிகா புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அவரது உறவினர்கள், ஆறடி ஆழத்தில், மூன்றடி தோண்டப்பட்டு, தர்ஷிகா உடை வெளியே தெரிந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலில், திருவிடைமருதுார் தாசில்தார் சாந்தமீனா, பந்தநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலையில், தர்ஷிகா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தோண்டியதில், தர்ஷிகாவின் உடல் அங்கு இருந்தது.
விசாரணையில், மர்மநபர்கள், அந்த இடத்தை தோண்டி, அவரது தலையை துாக்கி பார்த்து, அதன்பின், மண்ணால் மூடி விட்டு சென்றது தெரியவந்தது.
சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டியவர்கள் யார்? எதற்காக தோண்டினார்கள்? மந்திரவாதி கைவரிசையா? என்ற கோணத்தில் பந்தநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

