/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?
/
பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?
பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?
பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?
ADDED : செப் 07, 2025 01:20 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே பா.ம.க., சேர்மனை குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பல், போலீசார் விரட்டியதால், விழுப்புரம் அருகே காரை விட்டு தப்பியோடியது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையை சேர்ந்தவர் ஸ்டாலின். பா.ம.க., தஞ்சை மாவட்ட செயலரான இவர், ஆடுதுறை பேரூராட்சி தலைவராக உள்ளார். நேற்று முன்தினம், பேரூராட்சி அலுவலக அறையில், நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, காரில் வந்த எட்டு பேர் கும்பல், அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டுகளை வீசி, ஸ்டாலினை கொல்ல முயன்றது.
தடுக்க முயன்ற, சேர்மனின் கார் டிரைவர்களான இளையராஜா, அருண்குமார் ஆகியோரையும் அந்த மர்ம நபர்கள் வெட்டியதால் படுகாயமடைந்தனர்.
டிரைவர் அருண்குமார் புகாரின்படி, திருவிடைமருதுார் போலீசார், தப்பிய மர்ம கும்பலை தேடினர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், ராகவன்பேட்டை சாலையோரத்தில் நின்றிருந்த, மர்ம நபர்கள் பயன்படுத்திய காரை, வடலுார் போலீசார், நேற்று காலை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், சம்பவம் குறித்து லாலி மணிகண்டன் என்பவரின் சகோதரரும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பில் உள்ளவருமான மகேஷ் என்பவரை, போலீசார் விசாரிக்கின்றனர்.