sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

குடிபோதை தகராறில்  தொழிலாளி கொலை

/

குடிபோதை தகராறில்  தொழிலாளி கொலை

குடிபோதை தகராறில்  தொழிலாளி கொலை

குடிபோதை தகராறில்  தொழிலாளி கொலை


ADDED : அக் 20, 2025 12:20 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேராவூரணி: பேராவூரணி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டியராஜன், 39; தேங்காய் லோடு ஏற்றும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, பைக்கில் மீண்டும் ஊருக்கு செல்லும் வழியில், பள்ளத்துார் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அங்கு மது போதையில் வந்த பள்ளத்துாரை சேர்ந்த செந்தில், 33, இரவில் பாண்டியராஜன் தனியாக இருப்பதை பார்த்து விசாரித்த போது, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, செந்தில் அங்கு கிடந்த கட்டையால், பாண்டியராஜன் தலையில் அடித்தார்.

இதில், பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து, செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us