sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

இட தகராறில் வாலிபர் கொலை

/

இட தகராறில் வாலிபர் கொலை

இட தகராறில் வாலிபர் கொலை

இட தகராறில் வாலிபர் கொலை


ADDED : ஜூலை 15, 2025 06:21 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்; தஞ்சாவூரில் இட தகராறில் வாலிபரை கொலை செய்த தந்தை, மகன்களை போலீசார் தேடுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் அருகே வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 30. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர், 50. இவர்களின் வீட்டுக்கு பின்னால், பொது இடத்தில் கழிப்பறை கட்டுவதில் பிரச்னை இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, வெற்றிவேலுக்கும், அழகர் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி நடந்துள்ளது.

அப்போது, அழகர், அவரது மகன்கள் விக்னேஷ், 27, சந்துரு, 26, ஆகியோர் சேர்ந்து, கடப்பாரையால் வெற்றிவேலை தாக்கினர்; தடுக்கச் சென்ற வெற்றிவேலின் மைத்துனர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தினர்.

படுகாயமடைந்த வெற்றிவேல், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

காயமடைந்த சுரேஷ், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்தநல்லுார் போலீசார், அழகர், விக்னேஷ், சந்துருவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us