ADDED : செப் 06, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பெத்தணகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகபாரதி, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், அருண்குமார், ஜனனி, சந்திரன், ஜெயபிரபு, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி சந்திரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.