ADDED : ஏப் 25, 2024 03:53 AM
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா தேனிமேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னலை வகித்தனர். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினர். விழாவில் சினிமா நடிகை அனிதா, விண்வெளி வீராங்கனை உதயகீர்த்திகா பேசினர். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கட்டடவியல் துறை பிரதிக்ஷா, கணிப்பொறி, அறிவியல் துறை பிரியங்கா, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மகாலட்சுமி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் அஜந்தமீனா, இயந்திரவில் துறை முகமது வைசூல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் உறவின் முறை ஆட்சி மன்ற குழு, கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள், உறவின் முறை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.

