ADDED : மே 17, 2024 06:55 AM
கூடலுார் : மதுரை வேளாண் கல்லுாரி மாணவி பிரணவஸ்ரீ தலைமையில் கூடலுாரில் தென்னை விவசாயிகளுக்கு மரத்தின் வேர்களுக்கு ஊட்டம் அளித்தல் தொடர்பான செயல் விளக்கம் அளித்தனர்.
வண்டு தாக்குதலை குறைக்க பாலிதீன் பையில் 10 மி.லி., மோனோக்ரோடோபாஸ், 10 மி.லி., தண்ணீரில் கலந்து வெள்ளை அல்லது இளஞ்சோப்பு நிறத்திலான வேர்களில் சாய்வான வெட்டு கொடுத்து கட்டி விட வேண்டும். கூடுதலாக தாக்கப்பட்ட மரங்களுக்கு மட்டுமே இம்முறையை கையாள வேண்டும், என்றனர். தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கம்பம்: மதுரை வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் கம்பத்தில் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை விளக்கி வருகின்றனர். மாணவி பிரணவ ஸ்ரீ, புதுப்பட்டியில் வாழை விவசாயிகளுக்கு, வாழைக்கு ஊட்டமளிப்பது பற்றி விளக்கினார். மேலும் வாழை விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

