ADDED : ஜூலை 24, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூலை 25-
பெரியகுளம் அருகே, மேல்மங்கலம் கீழத்தெரு கண்ணன் 58. மாடு வாங்கி,விற்கும் புரோக்கர். இதே பகுதி அம்மாபட்டியைச் சேர்ந்த பாஸ்கரனுக்கு இரு மாதங்களுக்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு ஒரு கறவை மாட்டை விற்றார். பத்து நாட்களளுக்கு முன்பு மாட்டில் பால் சுரப்பு குறைந்தது. இதனால் மாட்டினை
பாஸ்கரன், கண்ணனிடம் திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில் டீ க்கடையில் நின்றிருந்த கண்ணனிடம் பாஸ்கரன் பணம் கேட்டுள்ளார். கண்ணன் இரு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்கரன், கண்ணனை தாக்கினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில், ஜெயமங்கலம் போலீசார் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
--
