ADDED : ஜூன் 08, 2024 05:47 AM

அ நிறம் | அளவு
மூணாறு: தேவிகுளத்தைச் சேர்ந்த முருகன், பேபி தம்பதியினரின் மகன் சதீஷ் 24, இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டினார்.
அவர் ஜூன் ஒன்று முதல் திடிரென மாயமானார். அது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சதீஷ் மாயமாவதற்கு இரு தினங்களுக்கு முன்பு தனது ஆட்டோவை விற்பனை செய்தார். அந்த பணத்துடன் மாயமானதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
