sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

/

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : மார் 10, 2025 05:43 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, பிப்.15ல் பயன்பாட்டிற்கு வந்தது.

நிழற்குடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, 10 கடைகள், தாய்மார்களுக்கான பாலுாட்டும் அறை, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, கட்டண கழிப்பறை, டூவீலர்கள் நிறுத்தும் பகுதி என அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது. தற்போது அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

பயன்பாட்டிற்கு வந்து 20 நாட்களுக்கு மேலான நிலையில் நேற்று முன்தினம் கட்டண கழிப்பறை பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் அங்குள்ள 10 கடைகள் டெண்டர் விடாமல் பூட்டியே உள்ளது.

புதுராஜா, மாநில நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டிற்குள் நிரந்தரமாக அனைத்து பஸ்களும் உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது. அடிப்படை வசதிகளான இலவச கழிப்பறைகள், குடிநீர் வசதி உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இரவில் பஸ்கள் உள்ளே சென்று திரும்புவதுடன் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us