ADDED : ஆக 06, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம், ஆக. 7
தென்மாவட்டங்களில் அதிகம் கல்லூரிகள் இல்லாத காலத்தில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி 1956 ல் கிராமப்புற மாணவர்களுக்காக துவங்கப்பட்டது. அவரது 68 வது நினைவு தின ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்லூரி தாளாளர் எம்.தர்வேஷ் முகைதீன் துவக்கி வைத்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் நத்தர் மீரான், முதல்வர் எச்.முகமது இஸ்ஹாக் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பின அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
