ADDED : மே 04, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
போடி, மே 5 -
போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் இனாயத் உசேன்கான், முதல்வர் விசுவாச ஜோன் பிரிட்டோ முன்னிலை வகித்தனர். மாணவர்கள் இடையே சிந்திக்கும் ஆற்றலை ஆசிரியர்கள் எப்படி உருவாக்குவது, கற்பித்தலின் முக்கியத்துவம், கல்வித்திறனை ஊக்குவித்தல் குறித்து போடி சி.பி.ஏ., கல்லூரி முன்னாள் பேராசிரியர் மோகனசுந்தரம், பயிற்சியாளர் ஆசிரியை சுபாஷினி எடுத்துக் கூறினர். முகாமில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
