ADDED : ஜூன் 26, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஜூன் 27-
ஆண்டிபட்டி ஒன்றியம்,ரங்கசமுத்திரம் வைகை கார்டன் ஸ்ரீ வீருசின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளில் வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விக்கிரக பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், கோயில் விமான கலச பிரதிஷ்டை நடந்தது. மறுநாள் நடந்த 2ம் கால பூஜைகளுக்குப் பின் ரக்ஷாபந்தனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் lநடந்தது. அதன் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அர்ச்சனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பெருமாள், சேகர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
