ADDED : மே 09, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ரோட்டின் இருபுறங்களிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் போடேந்திரபுரம் இளங்கேஸ்வரன் 50, வாழையாத்துப்பட்டி விஜய் 25, பூதிப்புரம் சதீஸ்குமார் 24 ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்தனர்.
கடை உரிமையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சண்முகம் புகாரில் வீரபாண்டி போலீசார் மூவரை கைது செய்தனர்.