ADDED : ஜூலை 24, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கடமலைக்குண்டில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். கடமலைக்குண்டு வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம், நிர்வாகி சூரியநாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உட்பட நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.