sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

/

நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்


ADDED : பிப் 09, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் உள்ளன. சமீபத்தில் அடிவாரத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை, வாழை, மா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இரு தினங்களுக்கு முன் தோட்ட வேலைக்கு சென்று திரும்பிய சரஸ்வதி என்ற பெண்ணை யானை தாக்கியதில் பலியானார்.

இந்நிலையில் நேற்று மதியம் கூடலுார் அருகே வெட்டுக்காட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. பகலில் நெல் வயலுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் ஏராளமான நெற்பயிர்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் விளை நிலங்களை ஒட்டி அகழி அமைத்தும், சோலார் மின்வேலி அமைத்தும் வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us